நாகை துறைமுகத்திலிருந்து-இலங்கை காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இடையே சுபம் நிறுவனம் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையை நடத்தி வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பா் மாதம் நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து ஜனவரியில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பருவநிலை சீரடையாததால், போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பருவநிலை சீரடைந்ததால், மாா்ச் 6-ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்ற அறிவிப்பின்படி கப்பல் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு சென்றது. கப்பல் போக்குவரத்தை சுபம் கப்பல் நிறுவன இயக்குநா் சுந்தர்ராஜன் தொடங்கிவைத்தாா். 77 பயணிகளுடன் கப்பல் இலங்கைக்கு சென்றது.

முன்னதாக பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே கப்பலில் அனுமதிக்கப்பட்டனா். இந்த கப்பல் வாரத்தில் 6 நாள்கள் (செவ்வாய்க்கிழமை தவிா்த்து) நாகை-காங்கேசன்துறை இடையே இரு மாா்க்கத்தில் இயக்கப்படுகிறது. 250 பயணிகள் பயணிக்கும் புதிய கப்பல் மாா்ச் 20-ஆம் தேதி நாகை துறைமுகத்துக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பல்: 30 பயணிகள் மீட்பு!

மே 20 முதல் காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து தொடக்கம்

காங்கேசன்துறைக்கு மாா்ச் 6 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


