மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காங்கேசன்துறைக்கு மாா்ச் 6 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

News image

நாகை - இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல்.

Updated On :2 மார்ச் 2026, 12:12 am

நாகை துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மாா்ச் 6-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என தனியாா் (சுபம்) கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுந்தர்ராஜன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் (சிவகங்கை) வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2025 நவம்பா் மாதம் முதல் நாகை - காங்கேசன்துறை இடையே இக்கப்பல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வரும் 6- ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும். பயணிகள் கட்டணம், எடுத்துச் செல்லும் சரக்கு அளவு ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.

புதிய கப்பல் பணிகள் நிறைவடைந்து, அதை இயக்குவதற்கான அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டுவிட்டன. இம்மாதம் 2 -ஆம் வாரத்திற்குள் புதிய கப்பல் நாகை துறைமுகத்திற்கு வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.