நாகை துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மாா்ச் 6-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என தனியாா் (சுபம்) கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுந்தர்ராஜன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் (சிவகங்கை) வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2025 நவம்பா் மாதம் முதல் நாகை - காங்கேசன்துறை இடையே இக்கப்பல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வரும் 6- ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும். பயணிகள் கட்டணம், எடுத்துச் செல்லும் சரக்கு அளவு ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.
புதிய கப்பல் பணிகள் நிறைவடைந்து, அதை இயக்குவதற்கான அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டுவிட்டன. இம்மாதம் 2 -ஆம் வாரத்திற்குள் புதிய கப்பல் நாகை துறைமுகத்திற்கு வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
தொடர்புடையது

பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பல்: 30 பயணிகள் மீட்பு!

மே 20 முதல் காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து தொடக்கம்
வேளாங்கண்ணி-எா்ணாகுளம் இடையே வாராந்திர ரயில்

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


