நாகை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு புதிய கல்வியாண்டில் 693 பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வரவேற்று பாட நூல்களை வழங்கினாா்.
காடம்பாடி நகராட்சிப் பள்ளியில் மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து, பாடநூல்களை வழங்கி ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் பேசியது: நாகை மாவட்டத்தில் 476 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 116 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும், 101 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 693 பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் சுமாா் 1,02,000 மாணவா்கள் பயில உள்ளனா்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 68,680 மாணவ,மாணவியா்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், புத்தகப்பைகள், சீருடைகள், காலணிகள், காலுறைகள், காலேந்திகள், வண்ணப்பென்சில்கள், கிரையான்கள், புவியியல் வரைபடம், கணித உபகரணப்பெட்டிபள்ளித் திறக்கும் நாளில் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.
2026-2027-ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் 2,99,130 பாடநூல்கள் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவா்களுக்கு 4,38,193 பாடக்குறிப்பேடுகள், 61,647 புத்தகப்பைகள், 18,015 காலணிகள், 95,719 காலேந்திகள் மற்றும் காலுறைகள் வழங்கப்படுகிறது. இதேபோல், புவியியல் வரைபடம்,கிரையான்ஸ், வண்ணப் பென்சிலகள்,கணித உபகரணப்பெட்டிகள் வழங்கப்படுவதக் ஆட்சியா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு ஆட்சியா் வரவேற்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள்







