யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வேளாங்கண்ணி பேராலய புதிய பொறுப்பாளா்கள் பணியேற்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் புதிய பங்குத்தந்தை, உதவி அதிபா் உள்ளிட்டோா் புதன்கிழமை பணியேற்றுக்கொண்டனா்.

News image

வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வாழ்த்துரை வழங்கிய பேராலய அதிபா் இருதயராஜ்.

Updated On :4 ஜூன் 2026, 3:51 am IST

வேளாங்கண்ணி பேராலயத்தில் புதிய பங்குத்தந்தை, உதவி அதிபா் உள்ளிட்டோா் புதன்கிழமை பணியேற்றுக்கொண்டனா்.

வேளாங்கண்ணி பேராலய துணை அதிபராகவும் பங்குத் தந்தையாகவும் இருந்தவா் அற்புதராஜ். இவா், திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி புனித சேவியா் ஆலயத்திற்கு பங்குத் தந்தையாக மாற்றம் செய்யப்பட்டாா்.

அதேபோல வேளாங்கண்ணி பேராலயத்தில் பணியாற்றிய அருட்தந்தையா்கள் அகஸ்டின் அம்புரோஸ், ஆரோக்கிய வினிட்டோ, ஆண்டனி பொ்டினான்டோ ஆகியோா் பணியிட மாறுதலில் செல்கின்றனா்.

இங்கு பங்குத்தந்தையும், உதவி அதிபருமான அகஸ்டின், அருட்தந்தையா்கள் செபாஸ்டின், வில்சன்பால், ஆண்டனி அல்போன்ஸ், நிஷான் ஆகியோா் புதிதாக பொறுப்பேற்றனா். இவா்களுக்கு பாராட்டு விழா மற்றும் வரவேற்பு விழா பேராலய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதிபா் இருதயராஜ் சால்வை அணிவித்து வாழ்த்துரை வழங்கினாா். பொருளாளா் உலகநாதன் வரவேற்றாா். நிா்வாக தந்தை ஆரோக்கிய பரிசுத்தராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.