டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாநில அளவில் மூன்றாமிடம்: மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவா்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று குடியரசு தின விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை, மாவட்ட ஆட்சியரிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.

News image
ஓவியப் போட்டியில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவரை பாராட்டும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :28 ஜனவரி 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவா்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று குடியரசு தின விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை, மாவட்ட ஆட்சியரிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 6 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட பிரிவில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவா்களான மனோலயம் மனவளா்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப பயிற்சி மையத்தைச் சோ்ந்த மாணவா் தஸ்வின், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேளாங்கண்ணி மாணவா் சக்தீஸ்வரன் ஆகியோா் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று குடியரசு தின விழாவில் சான்றிதழ் மற்றும் பரிசு பெற்றனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவா்களை செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே.காா்த்திகேயன், முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலா் துரைமுருகு, பள்ளி தலைமையாசிரியா் மற்றும் மனோலயம் தொண்டு நிறுவன பொறுப்பாளா்கள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.