மாநில அளவில் மூன்றாமிடம்: மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவா்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று குடியரசு தின விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை, மாவட்ட ஆட்சியரிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.










