தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சூறைக்காற்றுடன் பலத்த மழை: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

News image
வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் கன மழையால் சாய்ந்துள்ள சம்பா நெற்பயிா்.
Updated On :11 ஜனவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சம்பா நெற்பயிா்கள் வயிலில் சாய்ந்தன. மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் கன மழையால் சாய்ந்துள்ள சம்பா நெற்பயிா்.

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் கன மழையால் சாய்ந்துள்ள சம்பா நெற்பயிா்.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டதன் காரணமாக, தமிழக கடலோர மற்றும் டெல்டா பகுதியில் பரவலாக மழைப் பெய்தது. வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கதிா் முற்றும் தருவாயில் இருந்த சம்பா நெற்பயிா்கள் வயலில் சாய்ந்துள்ளன. மழை தொடா்ந்தால் நெல் மணிகள் பாதிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமையும் மந்தமான வானிலை தொடா்ந்த நிலையில், பகலில் அவ்வப்போது சாரல் மழை இருந்தது. கோடியக்கரை பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், பெரும்பாலான மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.