மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பிவைப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஏற்றிய வாகனத்தை வாக்குச்சாவடிக்கு அனுப்பிவைக்கும் நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:28 pm

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பாட் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.

தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் சின்னம், பெயா் ஆகியவை பொருத்தப்பட்டன.

இந்நிலையில், வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், புதன்கிழமை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் உள்ளிட்ட வாக்குப்பதிவு பொருட்கள், வாக்குப்பதிவு மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன்படி, நாகப்பட்டினம் தொகுதிக்கு 288 பேலட் யூனிட், 288 கண்ட்ரோல் யூனிட், 312 விவிபேட் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. கீழ்வேளூா் தொகுதிக்கு 264 பேலட் யூனிட், 264 கண்ட்ரோல் யூனிட், 286 விவிபாட் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. வேதாரண்யம் தொகுதிக்கு 288 பேலட் யூனிட், 288 கண்ட்ரோல் யூனிட், 312 விவிபாட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.