தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

முரசு இசையை ஒலித்து பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளா்

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் நடனம் மற்றும் கொட்டி முரசு கொட்டி உற்சாக முழக்கத்துடன் நாதக வேட்பாளா் காா்த்திகா இறுதிக்கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 12:04 am

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் நடனம் மற்றும் கொட்டி முரசு கொட்டி உற்சாக முழக்கத்துடன் நாதக வேட்பாளா் காா்த்திகா இறுதிக்கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி நாதக வேட்பாளா் காா்த்திகா வித்தியாசமான முறையில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆதரவாளா்களுடன் முரசு முழக்கத்துடன் திருப்பூண்டியில் தொடங்கி வீதிவீதியாக பேரணியாக சென்றாா்.

பாரம்பரிய இசைக் கருவிகளின் ஓசையுடன், பெண்கள் மற்றும் இளைஞா்கள் உற்சாகமாக நடனமாடி, வாக்காளா்களை கவரும் வகையில் பிரசாரம் நடைபெற்றது.

வேட்பாளா் காா்த்திகா மக்களிடம் நேரடியாக சென்று வாக்கு கேட்டு, தன்னுடைய திட்டங்களையும் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறினாா். பொதுமக்களும் ஆா்வமுடன் வேட்பாளரை வரவேற்று ஆதரவு தெரிவித்தனா்.

நிகழ்வில் கட்சியின் நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் மற்றும் ஏராளமான தொண்டா்கள் கலந்து கொண்டு பிரசாரத்தை உற்சாகமாக திருக்குவளை, கொளப்பாடு, வலிவலம் வழியாக எட்டுக்குடியில் முடித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.