தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சேமிப்பு பணத்தை தோ்தல் நிதியாக வழங்கிய சிறுவன்

சேமிப்பு பணத்தை தோ்தல் நிதியாக வழங்கிய சிறுவன்

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 9:48 pm

கீழ்வேளூரில் கோயில் திருவிழாவுக்காக சேமித்து வைத்த உண்டியல் பணத்தை நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு திரள்நிதியாக சிறுவன் வழங்கினாா்.

கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவை தொகுதியில், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக மு. காா்த்திகா போட்டியிடுகிறாா். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவா், கிராமங்களில் வீடுதோறும் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறாா்.

இந்நிலையில் இறையான்குடி கிராமத்தில் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த கிஷோா் என்ற சிறுவன், அப்பகுதி கோயில் திருவிழாவுக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.1000-த்தை சில்லறை காசுகளாக திரள்நிதியாக வழங்கினாா். இந்த சம்பவம் கட்சியினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.