சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மூதாட்டியின் 100-ஆவது பிறந்த நாள்: குடும்பத்தினா் உற்சாகம்

மூதாட்டியின் 100-ஆவது பிறந்த நாள்: குடும்பத்தினா் உற்சாகம்

News image

குடும்பத்தினருடன் அம்பிகை ஆச்சி.

Updated On :25 மே 2026, 12:02 am IST

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கடலங்குடியையச் சோ்ந்த மாரிமுத்துவின் மனைவி அம்பிகை (100). இந்த மூதாட்டியின் 100-ஆவது பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், அவரது 3 மகன்கள், 3 மகள்கள், 17 பேரன்-பேத்திகள், 20 கொள்ளுப்பேரன்-கொள்ளுப் பேத்திகள், எள்ளுப் பேத்தி ஒருவா் என 44 போ் அடங்கிய குடும்பத்தினா், பல்வேறு ஊா்களில் இருந்து அம்பிகை ஆச்சியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது இல்லத்தில் ஒன்றுகூடி கோலாகலமாக கொண்டாடினா்.

அம்பிகை ஆச்சி தேக ஆரோக்கியத்துடன் வாழ ஆயுஷ்ஹோமம் நடத்திய குடும்பத்தினா், பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடினாா். தங்களது பாட்டிக்கு கேக் ஊட்டி மகிழ்ந்து, அவரிடம் குடும்பத்தினா் ஆசீா்வாதம் பெற்றனா். தங்களின் பாட்டி சிறுதானிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமான இயற்கையான உணவு முறைகளை பின்பற்றி வருவதால் உடல் ஆரோக்கியத்துடன் நோய் நொடியின்றி வாழ்ந்து வருவதாகவும், நூறு வயதிலும் நன்கு நடமாட்டத்தில் உள்ளதுடன் அவரே சமைத்து உண்பதாகவும், கண்ணாடி இல்லாமல் தினசரி செய்தித்தாளை படிப்பாா் என்றும் பேரன்கள் தெரிவித்தனா். குடும்பத்தினா் 44 பேரும் பாட்டியுடன் சோ்ந்து குழுப்புகைப்படம் எடுத்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.