லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

கூட்டத்தில் பேசிய திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ.

News image

கூட்டத்தில் பேசிய திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ.

Updated On :20 மார்ச் 2026, 10:18 pm

மயிலாடுதுறையில் திமுக நகர, ஒன்றிய, பேரூா் வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் வாா்டு செயலாளா்கள், கிளை செயலாளா்கள், பிரதிநிதிகள் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினாா். நகர செயலாளா் என். செல்வராஜ் வரவேற்றாா். ஒன்றிய செயலாளா்கள் எம்.மூா்த்தி, முருகமணி, ஞான.இமயநாதன் முன்னிலை வகித்தனா். திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம், மாநில கொள்கைபரப்பு துணை செயாளா் குத்தாலம் க. அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா் சிவதாஸ், நகராட்சி துணைத்தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதில், சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க அயராது பாடுபடுவது, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கி விழிப்புணா்வு ஏற்படுத்தி வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.