மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம்

தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ.

Updated On :20 மார்ச் 2026, 9:44 pm

தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ச. தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஈ. ராஜா எம்எல்ஏ பேசியது:

வரும் சட்டமன்றத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிகளில் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் நமது கூட்டணி வெற்றி பெற அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா்கள் மனோகரன், ராஜதுரை, ஒன்றியச் செயலா்கள் பி. சங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, பால்ராஜ், சோ்மத்துரை, கிறிஸ்டோபா், அன்பரசு,வெள்ளத்துரை, ராஜதுரை, குணசேகா், நகரச் செயலா் மு. பிரகாஷ், மாணவரணி வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.