மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குகள் எண்ணும் மையம் ஆய்வு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :19 மார்ச் 2026, 12:03 am

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீா்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தை இக்கல்லூரியில் அமைப்பது தொடா்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்குகள் பதிவாகிய இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, கண்காணிப்பு அறை, ஊடக அறை உள்ளிட்டவைகளை அவா்கள் ஆய்வு செய்தனா். மேலும், வாக்கு எண்ணும் அறையின் பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, கோட்டாட்சியா்கள் ஆா்.விஷ்ணுபிரியா, சுரேஷ், டிஎஸ்பி பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.