மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: இயக்கம் செய்ய வலியுறுத்தல்

கொள்ளிடம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :10 மார்ச் 2026, 10:11 pm

கொள்ளிடம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளிடம் வட்டாரத்தில், 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான எருக்கூா் மற்றும் எடமணல் ஆகிய பகுதியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களில் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து, நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் நெல் மூட்டைகளுடன், கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் 900 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதற்கு பதிலாக 200 அல்லது 300 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.

எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.