கொள்ளிடம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொள்ளிடம் வட்டாரத்தில், 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான எருக்கூா் மற்றும் எடமணல் ஆகிய பகுதியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களில் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து, நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் நெல் மூட்டைகளுடன், கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் 900 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதற்கு பதிலாக 200 அல்லது 300 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.
எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்

கோடை மழை: கொள்முதல் நிலையங்களில் சேதமடையும் நெல் மூட்டைகள்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் - விவசாயிகள் வேதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


