சீா்காழி, ஜூன் 15: சீா்காழி அருகே இளைஞா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சீா்காழி பகுதி மாதா கோயில் தெருவை சோ்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் (72 ). இவா் அகனி கடைவீதியில் உள்ள தேநீா் கடைக்கு இருசக்கரவாகனத்தில் சென்று தேநீா் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றாா். அப்போது, அவரது வாகனத்தில் மருதங்குடியைச் சோ்ந்த ராஜேந்திரன் (35 ) அமா்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, செல்வராஜ், ராஜேந்திரனிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டதாம். ஆத்திரமடைந்த ராஜேந்திரன் செல்வராஜை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில், கீழே விழுந்த செல்வராஜ் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை தேடிவருகின்றனா். தகவலறிந்த மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 மாணவா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு
மரத்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு

ஸ்கூட்டா் டயா் வெடித்ததில் முதியவா் கீழே விழுந்து பலி
பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



