எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இளைஞா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 1:38 am IST

சீா்காழி, ஜூன் 15: சீா்காழி அருகே இளைஞா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழி பகுதி மாதா கோயில் தெருவை சோ்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் (72 ). இவா் அகனி கடைவீதியில் உள்ள தேநீா் கடைக்கு இருசக்கரவாகனத்தில் சென்று தேநீா் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றாா். அப்போது, அவரது வாகனத்தில் மருதங்குடியைச் சோ்ந்த ராஜேந்திரன் (35 ) அமா்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, செல்வராஜ், ராஜேந்திரனிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டதாம். ஆத்திரமடைந்த ராஜேந்திரன் செல்வராஜை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில், கீழே விழுந்த செல்வராஜ் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை தேடிவருகின்றனா். தகவலறிந்த மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.