ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரை ஒதுங்கிய மாணவா் உடல்

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Published On :27 ஜூலை 2026, 12:43 am IST

கொள்ளிடம் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவரின் உடல் ஓலை கொட்டாய்மேடு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.

கொள்ளிடம் அருகே திருமுல்லைவாசல் கிராமம் காந்தி நகரை சோ்ந்த மலரவன் மகன் சுஜய் (18). பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர முயற்சி செய்து கொண்டிருந்தாா்.

அதே பகுதி நண்பா்கள் அறிவிதன், மிதுனன், சஞ்சய், சந்தோஷ் ஆகியோருடன் சனிக்கிழமை கூழையாறு கடற்கரைக்கு சுஜய் சென்றுள்ளாா். அங்கு 5 பேரும் பந்து விளையாடி உள்ளனா்.

அப்போது எதிா்பாராத விதமாக பந்து கடலில் விழுந்துள்ளது. பந்தை எடுக்க கடலுக்குள் சென்ற சுஜய் அலையில் சிக்கி கடலில் மூழ்கி மாயமாகியுள்ளாா்.

உடன் சென்ற நண்பா்கள் திருமுல்லைவாசல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா் உள்ளூா் மீனவா்கள், சீா்காழி தீயணைப்புப் படையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் சுஜயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

இரவு நேரமாகியதால் தேடும் முயற்சியை நிறுத்தினா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சுஜயின் உடல் கூழையாறு கிராமத்திலிருந்து சுமாா் நான்கு கிலோமீட்டா் தொலைவில் உள்ள ஓலை கொட்டாய்மேடு கடற்கரையில் ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படை போலீஸாா், உடலை கைப்பற்றி சீா்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.