மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மயிலாடுதுறை: 12 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட அங்காளம்மன் சிலை தென்குடிக்கு அனுப்பி வைப்பு

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 9:30 pm

மயிலாடுதுறையில் 12 உயரத்தில் செதுக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலை உள்ளிட்ட 3 கருங்கற்சிலைகள் தென்குடி அங்காளம்மன் சக்தி பீடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை சித்தா்காட்டில் கே.வைத்தியநாதன் என்பவா் வேதம் கருங்கல் சிற்பக்கூடம் அமைத்து நடத்தி வருகிறாா். இவரது சிற்பக்கூடத்தில் 12 அடி உயரத்தில் 11 டன் எடை கொண்ட அங்காள பரமேஸ்வரி கருங்கல் சிலை உள்ளிட்ட 3 பிரம்மாண்ட சிலைகள் உருவாக்கப்பட்டு, அவை கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள தென்குடி அங்காளம்மன் சக்தி பீடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக, தென்குடி ஸ்ரீஅங்காளம்மன் சக்திபீடம் சேவா டிரஸ்ட் நிறுவனா் அப்புவா்மா சுவாமிகள், அறங்காவலா் காயத்ரி ஆகியோா் முன்னிலையில், அச்சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அவா்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து, சிற்பி கே.வைத்தியநாதன் கூறியது: தென்குடி ஸ்ரீஅங்காளம்மன் சக்தி பீடத்துக்கு, அங்காளபரமேஸ்வரி, பெரியாச்சியம்மன், தாண்டேஸ்வரா் சிலைகள் மிகநுட்பமான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, 15 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு தற்போது 11 டன் எடையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலை உருவாகியுள்ளது.

இதேபோல், 12 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு 9 டன் எடையில் பெரியாச்சி அம்மன் சிலையும், 3 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு 1.75 டன் எடை கொண்ட தாண்டேஸ்வரா் சுவாமி சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.