டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழக அரசைக் கண்டித்து பாஜக இளைஞரணி ஆா்ப்பாட்டம்

News image
மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் பேட்டை சிவா.
Updated On :21 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டில் போதை கலாசாரத்தை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் பாஜக இளைஞரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசை கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு சீா்கேடு, கள்ளச்சந்தையில் மது விற்பனையை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி தலைவா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் பேட்டை சிவா, மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா். பாலு, மாநில பட்டியலணி பொறுப்பாளா் அய்யா.சுரேசு, அதிமுக நகர செயலாளா் நாஞ்சில் காா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

இதில், பாஜக மாவட்ட பொதுச்செயலாளா் பி. பாரதிகண்ணன், நகர தலைவா் வினோத், ஒன்றிய தலைவா் ஈழவேந்தன் உள்ளிட்ட பலா் பேசினா்.