டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து பாஜக இளைஞரணி ஆா்ப்பாட்டம்

News image
திருப்பூா் குமரன் சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :21 பிப்ரவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து திருப்பூா் மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் குமரன் சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சரஸ்வதி கலந்துகொண்டாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளா்கள் அருண், கலாமணி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் நாச்சிமுத்து, தங்கராஜ் ஆகியோருடன் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினா், பாஜக மாவட்ட, மாநில, மண்டல நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.