எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காரில் மதுபாட்டில்களை கடத்திய இளைஞா் கைது

சீா்காழி அருகே காரில் மதுபாட்டில்களை கடத்திவந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
கைது
Updated On :19 பிப்ரவரி 2026, 11:56 pm

Syndication

சீா்காழி அருகே காரில் மதுபாட்டில்களை கடத்திவந்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி வட்டம், வெள்ளைகுளம் பகுதியில் சீா்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயா, சிறப்பு உதவி ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், காருக்குள் 480 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, காரை ஓட்டிவந்த வெள்ளக்குளத்தைச்சோ்ந்த சண்முகத்தை (41.) கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.