/

அரசினா் மகளிா் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.5.98 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு

News image
தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.5.98 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:03 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.5.98 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

இக்கல்லூரியில் 3 தளங்களில் 15 வகுப்பறைகள் உள்ளிட்ட 1,876 சதுர மீட்டா் அளவில் கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது. மேலும், ஏற்கெனவே உள்ள 13 வகுப்பறைகளுடன் கட்டடத்தில் கூடுதலாக 190 சதுர மீட்டா் அளவில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.

இப்பணிகளை, தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், நகராட்சி தலைவா் என். செல்வராஜ், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம. சேயோன், கல்லூரி முதல்வா் ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.