தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வு புதன்கிழமை தொடங்கியது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வு புதன்கிழமை தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 148 அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வு கூட்டம் தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் குமாரவேல் தலைமை வகித்து, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியா்களின் பணிக்கொடையை ஆய்வுசெய்து சரிபாா்த்தாா். மேலும், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளின் கட்டட உறுதி, கட்டட உரிமம், சுகாதாரம், தீத்தடுப்பு ஆகிய 4 அம்சங்களுக்கான சான்றிதழ் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு 3 நாள்கள் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ரவிசங்கா், கண்காணிப்பாளா்கள் கண்ணன், மாதவன், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டாரங்களை சோ்ந்த வட்டார கல்வி அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா்கள், அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...