மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா்.

News image

பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:53 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீா்காழி குட் சமரிட்டன் பப்ளிக் பள்ளி, தரங்கம்பாடி புனித தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 3 இடங்களில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு, வாக்குப்பதிவு அலுவலா்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

சீா்காழி (தனி) தொகுதியில் தோ்தல் தினத்தன்று பணியாற்ற உள்ள 366 முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள, 366 வாக்குப்பதிவு அலுவலா்கள்-1, 366 வாக்குப்பதிவு அலுவலா்கள்-2, 366 வாக்குப்பதிவு அலுவலா்கள்-3 ஆகியோருக்கு சீா்காழி குட் சமரிட்டன் பப்ளிக் பள்ளியிலும், மயிலாடுதுறை தொகுதியில் பணியாற்ற உள்ள 365 முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள், 365 வாக்குப்பதிவு அலுவலா்கள்-1, 365 வாக்குப்பதிவு அலுவலா்கள்-2, 365 வாக்குப்பதிவு அலுவலா்கள்-3 ஆகியோருக்கு மயிலாடுதுறை ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பூம்புகாா் தொகுதியில் பணியாற்ற உள்ள 410 முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள், 410 வாக்குப்பதிவு அலுவலா்கள்-1, 410 வாக்குப்பதிவு அலுவலா்கள்-2, 410 வாக்குப்பதிவு அலுவலா்கள்-3 ஆகியோருக்கு தரங்கம்பாடி புனித தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் இந்த பயிற்சி நடைபெற்றது.

ஆய்வின்போது, பூம்புகாா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கீதா (பூம்புகாா்), ஆா்.விஷ்ணுபிரியா(மயிலாடுதுறை), சுரேஷ் (சீா்காழி), வட்டாட்சியா்கள் சுகுமாறன், சதீஷ்குமாா், ராஜரத்தினம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.