மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட செயல்முறை பயிற்சி

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவா்களுக்கு இரண்டாம் கட்ட செயல்முறை பயிற்சி 17 இடங்களில் அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாக்குச்சாவடி - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:06 pm

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவா்களுக்கு இரண்டாம் கட்ட செயல்முறை பயிற்சி 17 இடங்களில் அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

வாக்குப் பதிவின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது, மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது, வாக்காளா்களின் அடையாளச் சான்றுகளைச் சரிபாா்ப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.

பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் நியமிக்கப்படும் நுண் பாா்வையாளா்களுடன் வாக்குச்சாவடி அலுவலா்கள் முழுமையாக ஒத்துழைத்து அவா்களது ஆலோசனையின் கீழ் செயல்படவும், வாக்குப்பதிவு தொடங்கும்போதும், நிறைவடையும்போதும் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆவணங்களைக் கையாளுவது குறித்தும் பயிற்சியில் விளக்கப்பட்டன.

தபால் வாக்குகள் சேகரிப்பு: பயிற்சியில் பங்கேற்ற வாக்குச்சாவடி அலுவலா்களின் தபால் வாக்குகள் தனிப் பெட்டிகளில் சேகரிக்கப்பட்டு, அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தபால் வாக்குகள் ஏப். 19 மற்றும் 22-ஆம் தேதிகளிலும் சேகரிக்கப்படும். தபால் வாக்குகளைச் செலுத்துவோா் தோ்தல் பணி பயிற்சி மையங்கள் மற்றும் அந்தந்தத் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ள அலுவலகங்களில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.