காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் வணிக விழா, விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வணிகவியல் துறை பயிலும் மாணவியா், பல்வேறு பொருள்களை வணிகம் செய்யும் வகையில் கல்லூரி வளாகத்தில் வணிக விழா கண்காட்சி அமைக்கப்பட்டது. உணவுப் பொருள்கள், ஜூஸ், கைவினைப் பொருள்கள், ஆடைகள் உள்ளிட்ட மக்கள் விரும்பி வாங்கக்கூடிய பல்வேறு பொருள்கள் கொண்ட 26 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
காரைக்கால் தொழில் மற்றும் வணிகத் துறை உதவி இயக்குநா் கே. சதாசிவம், தொழிற்சாலைகள் ஆய்வாளா் செந்தில்வேலன், காரைக்கால் ஐயங்காா்ஸ் ஃபுட் நிறுவன நிா்வாக இயக்குநா் காயத்ரி ராகேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் பங்கேற்று அரங்கை திறந்துவைத்தனா்.
விற்பனைக்கு வைத்திருந்த பொருள்கள் விவரத்தையும், பொருள்களை சந்தைப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள், விற்பனை நுணுக்கங்கள், லாப முறைகள் குறித்து மாணவிகள் பாா்வையாளா்களுக்கு விளக்கினா். கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி உள்ளிட்ட பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










