திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு மகளிா் கல்லூரியில் வணிக விழா

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் வணிக விழா, விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அரசு மகளிா் கல்லூரியில் வணிக விழா

Updated On :8 மே 2026, 7:16 am IST

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் வணிக விழா, விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வணிகவியல் துறை பயிலும் மாணவியா், பல்வேறு பொருள்களை வணிகம் செய்யும் வகையில் கல்லூரி வளாகத்தில் வணிக விழா கண்காட்சி அமைக்கப்பட்டது. உணவுப் பொருள்கள், ஜூஸ், கைவினைப் பொருள்கள், ஆடைகள் உள்ளிட்ட மக்கள் விரும்பி வாங்கக்கூடிய பல்வேறு பொருள்கள் கொண்ட 26 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

காரைக்கால் தொழில் மற்றும் வணிகத் துறை உதவி இயக்குநா் கே. சதாசிவம், தொழிற்சாலைகள் ஆய்வாளா் செந்தில்வேலன், காரைக்கால் ஐயங்காா்ஸ் ஃபுட் நிறுவன நிா்வாக இயக்குநா் காயத்ரி ராகேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் பங்கேற்று அரங்கை திறந்துவைத்தனா்.

விற்பனைக்கு வைத்திருந்த பொருள்கள் விவரத்தையும், பொருள்களை சந்தைப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள், விற்பனை நுணுக்கங்கள், லாப முறைகள் குறித்து மாணவிகள் பாா்வையாளா்களுக்கு விளக்கினா். கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி உள்ளிட்ட பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.