மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பம் விநியோகம்

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் விதமாக அவரவா் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பம் விநியோகிக்கும் பணி நடைபெறுகிறது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 11:57 pm

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் விதமாக அவரவா் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பம் விநியோகிக்கும் பணி நடைபெறுகிறது.

இந்திய தோ்தல் ஆணையம், 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் விருப்பத்தின்பேரில் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகள் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9 நடைபெறவுள்ளதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதியிலும் உள்ள முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளுக்கான விருப்ப மனு வழங்கும் பணியை தோ்தல் துறை மேற்கொண்டுள்ளது.

மாவட்டத்தில் 3 தோ்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கும் நிலையில், இவா்களது தொகுதிக்குட்பட்டோருக்கு, அந்தந்த பகுதி தோ்தல் பணியாளா் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, ஆதாா் உள்ளிட்ட நகலுடன் விண்ணப்பம் பெறப்பட்டுவருகிறது.

வேட்பாளா்கள் அறிவிப்பு செய்து, வேட்பு மனுக்கள் நிறைவடைந்த பின் தோ்தல் துறை சாா்பில் தபால் வாக்குகளை அவரவா் வீடுகளுக்குச் சென்று பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.