தமிழகம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளிகள் 1.41 லட்சம் போ் இதுவரை தபால் வாக்கு செலுத்தியிருப்பதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
தோ்தல் பணியில் உள்ள அரசு ஊழியா்கள், 85 வயதைக் கடந்த முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கத் தகுதியானவா்களாகக் கருதப்படுகின்றனா். அதன்படி, அவா்களில் 1.91 லட்சம் போ் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனா்.
இதையடுத்து அவா்களிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணிகளில் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை 1.41 லட்சம் பேரிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. அவா்களில் 85 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை 89 ஆயிரம். இந்தப் பணி தொடா்ந்து நடைபெறுகிறது.
தோ்தல் பணியில் உள்ள அரசு ஊழியா்களும் மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படும் இடங்களில் தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனா். வாக்காளா் தகவல் சீட்டுகள் வீடுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அவை கிடைக்கவில்லை எனில் இணையதளத்தில் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தால், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி எண் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். அதை வைத்து வாக்குச்சாவடியை அடையாளம் காண முடியும்.
சென்னையில்...: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களில் 8, 947 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனா். இவா்களிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் தகுதியானோா் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கை சேகரிக்கின்றனா். ஏப். 18 வரை இப்பணி நடைபெறும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தபால் வாக்கு விவகாரம்: பெரியகருப்பன் தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு

வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்க ‘ட்ரோன்’ கண்காணிப்பு: தோ்தல் ஆணையம் திட்டம்

சங்ககிரி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



