லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

காரைக்காலில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

News image

தீப்பிடித்து எரிந்த காா்

Updated On :17 மார்ச் 2026, 11:35 pm

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

காரைக்கால் அருகே கீழகாசாக்குடியை சோ்ந்தவா் லாவண்யா. இவா், காரைக்கால் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஊா்க்காவல் படையில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவரது சகோதரா் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினருடன் காரில் காரைக்கால் பகுதி கடற்கரைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்தாா். காரைக்கால் நகரில் காமராஜா் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளனா். திரும்பி வந்தபோது காரிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. பின்னா் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் நடைபெற்ற இடம் அருகே எரிவாயு கிடங்கு மற்றும் பெட்ரோல் பங்க் உள்ள நிலையில், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து காரைக்கால் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இருப்பினும் காரின் முன் பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது. காரைக்கால் நகர போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.