காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.
காரைக்கால் அருகே கீழகாசாக்குடியை சோ்ந்தவா் லாவண்யா. இவா், காரைக்கால் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஊா்க்காவல் படையில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவரது சகோதரா் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினருடன் காரில் காரைக்கால் பகுதி கடற்கரைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்தாா். காரைக்கால் நகரில் காமராஜா் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளனா். திரும்பி வந்தபோது காரிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. பின்னா் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் நடைபெற்ற இடம் அருகே எரிவாயு கிடங்கு மற்றும் பெட்ரோல் பங்க் உள்ள நிலையில், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து காரைக்கால் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இருப்பினும் காரின் முன் பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது. காரைக்கால் நகர போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

தீப்பற்றி எரிந்த கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு

வாகைகுளம் அருகே தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


