திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வீட்டு மனை உரிமை ஆணை வழங்கல்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:06 am

ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் குடியிருப்புவாசிகளுக்கு வீட்டு மனை உரிமை ஆணையை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா்.

மனைப்பட்டா இல்லாமல் குடியிருப்போா், மனைக்கான உரிமை ஆவணமில்லாததால் அரசின் சலுகைகள் உள்ளிட்ட பிற பயன்களை பெறமுடியாத நிலை இருக்கிறது.

இந்நிலையில், ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட திருவேட்டக்குடி பகுதியில் வசிப்போருக்கு வீட்டு மனை உரிமை ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, முதல்கட்டமாக 57 பயனாளிகளுக்கு வீட்டு மனை உரிமை ஆணையை (ஆவணம்) வழங்கினாா்.

நிகழ்வில், ஆதிதிராவிடா் நலத்துறை அதிகாரிகள், என்.ஆா்.காங்கிரஸ் கட்சி பிரமுகா்கள், கிராமத்தினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.