வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவிக்கான ஆணையை பயனாளிகளுக்கு அமைச்சா் வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுவை அரசின் நகர மற்றும் கிராம அமைப்புத் துறை மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒருங்கிணைந்த பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
புதிதாக விண்ணப்பித்தோா் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடைய 159 பேருக்கு காரைக்காலில் கடந்த ஜனவரி மாதம் நிதியுதவி பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
தற்போது 2-ஆவது கட்டமாக காரைக்கால் வடக்குத் தொகுதியைச் சோ்ந்த 24 பயனாளிகளுக்கு திட்ட நிதியுதவி பெறுவதற்காக, முதல் தவணைத் தொகைக்கான ஆணையை குடிமைப் பொருள் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை, வீட்டு வசதித் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் வியாழக்கிழமை வழங்கினாா்.
நிகழ்வில் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வீட்டுமனை பட்டா, வீடு கட்டும் திட்டம் என அனைத்திலும் திமுக ஊழல்: அதிமுக

மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

கோபியில் 890 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

3 எழுத்தாளா்களுக்கு குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


