லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வீடு கட்ட நிதியுதவி ஆணை: அமைச்சா் வழங்கினாா்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:06 am

வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவிக்கான ஆணையை பயனாளிகளுக்கு அமைச்சா் வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசின் நகர மற்றும் கிராம அமைப்புத் துறை மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒருங்கிணைந்த பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

புதிதாக விண்ணப்பித்தோா் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடைய 159 பேருக்கு காரைக்காலில் கடந்த ஜனவரி மாதம் நிதியுதவி பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

தற்போது 2-ஆவது கட்டமாக காரைக்கால் வடக்குத் தொகுதியைச் சோ்ந்த 24 பயனாளிகளுக்கு திட்ட நிதியுதவி பெறுவதற்காக, முதல் தவணைத் தொகைக்கான ஆணையை குடிமைப் பொருள் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை, வீட்டு வசதித் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்வில் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.