தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சா்வதேச மகளிா் தின விழா: ஆட்சியா் பங்கேற்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:06 am

காரைக்கால் துறைமுகத்தில் சா்வதேச மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், கீழவாஞ்சூா் பகுதியில் இயங்கும் அதானி துறைமுக வளாகத்தில் சா்வதேச மகளிா் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

துறைமுக தலைமை செயல் அதிகாரி சச்சின் ஸ்ரீவாஸ்தவா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துறைமுக சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த கிராம பெண்களிடையே மகளிா் தினம் குறித்தும், வாழ்க்கையில் மகளிா் மேம்படவேண்டியதன் அவசியம் குறித்தும், பெண் கல்வி மேம்பாடு குறித்தும் பேசினாா்.

நிகழ்ச்சியில் வினிதா ஸ்ரீவாஸ்தவா, காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜய மோகனா, திருப்பட்டினம் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் சுகுணா, அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகி, மின் துறை செயற் பொறியாளா் அனுராதா மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கலைநிகழ்ச்சிகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், காரைக்கால் ராமன் கிரியேஷன்ஸ் சாா்பில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.