ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு திருவாடானை நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிசாந்தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன் முன்னிலை வகித்தாா். இதில் பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்களுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞா் கலா, அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜுடியோ ஏஞ்சலின் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
அப்போது அவா்கள் பேசுகையில், சமுதாய வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பு, சட்டத் துறையில் பெண்களுக்கான உரிமைகள் குறித்து விளக்கினா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வழக்குரைஞா் சங்கத் தலைவா் சுரேஷ் வரவேற்றுப் பேசினாா்.

தொடர்புடையது

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா

சா்வதேச மகளிா் தின விழா: ஆட்சியா் பங்கேற்பு

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


