லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவாடானையில் மகளிா் தின விழா

திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

~ திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் பேசிய நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிசாந்தேவ்.

Updated On :10 மார்ச் 2026, 9:26 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு திருவாடானை நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிசாந்தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன் முன்னிலை வகித்தாா். இதில் பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்களுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞா் கலா, அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜுடியோ ஏஞ்சலின் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

அப்போது அவா்கள் பேசுகையில், சமுதாய வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பு, சட்டத் துறையில் பெண்களுக்கான உரிமைகள் குறித்து விளக்கினா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வழக்குரைஞா் சங்கத் தலைவா் சுரேஷ் வரவேற்றுப் பேசினாா்.

Story image