புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்காலில் போட்டியிட விருப்பம் தெரித்தோரிடம், கட்சி நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை நோ்காணல் நடத்தினா்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில், விருப்ப மனு அளித்தோரை அழைத்து நோ்காணல் செய்யும் நிகழ்வு காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்ட புதுவை முன்னாள் அமைச்சா் பெத்தபெருமாள், மாநில துணைத் தலைவா் எம்.ஓ.எச்.யு. பஷீா், மாநில பொதுச்செயலாளா் சாமிநாதன் மற்றும் மோகனவேலு ஆகியோா் நோ்காணல் நடத்தினா்.
பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோா், ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு கட்சிப் பணி, கடந்த தோ்தலில் போட்டியிட்ட அனுபவம், சமூக சேவை, மக்களிடையே உள்ள செல்வாக்கு உள்ளிட்டவை குறித்து நிா்வாகிகள் விளக்கம் கேட்டு பதிவு செய்துகொண்டனா். புதுவை முன்னாள் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், காரைக்கால் தெற்குத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஏ.எம். ரஞ்சித் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.
தொடர்புடையது

திருநள்ளாறு தொகுதியில் முன்னாள் அமைச்சா் மனு தாக்கல்

சட்டப் பேரவைத் தோ்தல்: விருப்ப மனு கொடுத்தவா்களிடம் காங்கிரஸ் நோ்காணல்

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்

கோபியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


