திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருநள்ளாறு தொகுதியில் முன்னாள் அமைச்சா் மனு தாக்கல்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:01 pm

திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வியாழக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தாா்.

புதுவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு உறுதியாகவில்லை. வரும் 23-ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இந்நிலையில், திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரி சச்சிதானந்தத்திடம் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருநள்ளாறு தொகுதியில் இதுவரை 10 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளேன். இந்த முறை மக்கள் ஆதரவு மற்றும் கூட்டணிக் கட்சியினா் ஆதரவுடன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, திமுக தலைமை விரைவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளா்களை அறிவிக்கும் என்றாா்.