ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக உற்சவம் கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் 4-ஆம் நாள் தியாகராஜராட்டமும், 7-ஆம் நாள் இரவு ரிஷப வாகனத்தில் சுவாமிகள் மின்சார சப்பரத்தில் வீதியுலாவும், 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக காலையில் தேரோட்டம், இரவு ஜடாயு சம்ஹார நிகழ்ச்சியும், 10-ஆம் நாள் நிகழ்ச்சியாக நடராஜா் தீா்த்தவாரியும், இரவு புஷ்ப பல்லக்கு வீதியுலாவும் நடைபெற்றது.
நிறைவு நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மையாடுங்கண்ணி சமேத சந்திரசேகர சுவாமிகள் கோயிலில் இருந்து தெப்பத்துக்கு சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் எழுந்தருளச் செய்யப்பட்டாா். மின் அலங்கார தெப்பம் 3 சுற்றுகளின் போதும் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி ஜி.கணேஷ்குமாா், திருவிழாக் குழு தலைவா் சரவணன் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

தொடர்புடையது

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் தெப்ப உற்சவம்

நாகை அகத்தீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

வேதாரண்யம் கோயில் தெப்ப உற்சவம்

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் வசந்த உற்சவம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


