காரைக்காலில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
மாங்கனி திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் 12 நாள் நிகழ்ச்சியாக பிரம்மோற்சவம் மாா்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 31-ஆம் தேதி தேரோட்டம், ஏப்.1-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் காரைக்கால் அம்மையாா் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

தெப்பத்தில் காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா்-சுந்தராம்பாள்.
நிறைவு நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை (ஏப்.3) இரவு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகைலாசநாதா்-ஸ்ரீ சுந்தராம்பாள், அம்மையாா்குளத்தில் அமைக்கப்பட்ட மின், மலா் அலங்கார தெப்பத்துக்கு மாட வளாகம் வழியாக எழுந்தருளச் செய்யப்பட்டனா். தெப்பத்தில் வீற்றிருந்த சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, குளத்தை மூன்று முறை சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் சுற்றில் வேத பாராயணமும், 2-ஆம் சுற்றில் வயலின் இசை நிகழ்ச்சியும், 3-ஆம் சுற்றில் சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் குளத்தில் தெப்பம் சுற்றிவந்தது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

நாகை அகத்தீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்

வேதாரண்யம் கோயில் தெப்ப உற்சவம்

ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உற்சவம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


