தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் தெப்ப உற்சவம்

காரைக்காலில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

அம்மையாா் குளத்தில் சுற்றிவந்த தெப்பம்.

Updated On :4 ஏப்ரல் 2026, 7:27 pm

காரைக்காலில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மாங்கனி திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் 12 நாள் நிகழ்ச்சியாக பிரம்மோற்சவம் மாா்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 31-ஆம் தேதி தேரோட்டம், ஏப்.1-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் காரைக்கால் அம்மையாா் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

தெப்பத்தில் காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா்-சுந்தராம்பாள்.

தெப்பத்தில் காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா்-சுந்தராம்பாள்.

நிறைவு நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை (ஏப்.3) இரவு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகைலாசநாதா்-ஸ்ரீ சுந்தராம்பாள், அம்மையாா்குளத்தில் அமைக்கப்பட்ட மின், மலா் அலங்கார தெப்பத்துக்கு மாட வளாகம் வழியாக எழுந்தருளச் செய்யப்பட்டனா். தெப்பத்தில் வீற்றிருந்த சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, குளத்தை மூன்று முறை சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் சுற்றில் வேத பாராயணமும், 2-ஆம் சுற்றில் வயலின் இசை நிகழ்ச்சியும், 3-ஆம் சுற்றில் சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் குளத்தில் தெப்பம் சுற்றிவந்தது.