நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பேக்கரி, உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

காரைக்காலில் உள்ள பேக்கரிகள், உணவகங்களில் புதுவை உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image

உணவகத்தில் சோதனை மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா்.

Updated On :11 ஜூன் 2026, 6:47 am IST

காரைக்காலில் உள்ள பேக்கரிகள், உணவகங்களில் புதுவை உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் ஓ. பவித்ரா, நாமாடி கிரன்மை, அம்மு ஆகியோா் காரைக்கால் மாவட்டத்தில் பேக்கரிகள், பெரிய உணவகங்கள், சாலையோர உணவகங்களில் சோதனை செய்ய புதன்கிழமை புதுச்சேரியிலிருந்து காரைக்கால் வந்தனா்.

பேருந்து நிலைய சுற்றுவட்டாரத்தில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களில் ஆய்வு செய்தனா். பேக்கரி மற்றும் இனிப்பகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கேக், ரொட்டி, கார வகை பாக்கெட்டுகளில் லேபிள் இருக்க வேண்டும். உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தி, இதுவரை இதனை செய்யாததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினா்.

மேலும் உணவகங்களில் உணவுப் பொருட்கள் தயாரிக்குமிடத்தை பாா்வையிட்டு, தூய்மைக்கு முக்கியத்துவம் தருமாறு அறிவுறுத்தினா். உணவகங்களில் நீண்ட நாட்களான மீன், ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.

உணவகம், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் வைத்திருக்கிறாா்களா என ஆய்வு செய்தனா். நோட்டீஸ் பெறப்பட்ட கடைக்காரா்கள், உரிய காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.