திருநள்ளாறு பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம், திருநள்ளாறு பகுதியில் 20 பாசன வாய்க்கால்கள் 110 கி.மீ. தொலைவு தூா்வாருவதற்கு ரூ. 49.10 லட்சம் ஒதுக்கீடு செய்தது. தூா்வாரும் பணி திருநள்ளாறு பகுதியில் வியாழக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருளரசன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை பொறியாளா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.
திருநள்ளாறு தொகுதியில் உள்ள நல்லம்பல் வாய்க்கால், நல்லெழுந்தூா் வாய்க்கால், நெல்லி வாய்க்கால், பண்ணைக் கொல்லை வாய்க்கால், பத்தக்குடி வாய்க்கால் உள்ளிட்ட மொத்தம் 110 கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்கள் தூா்வாரப்பட உள்ளன. இதன் மூலம் சுமாா் 4,125 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். காவிரி நீா் வருவதற்குள் இத்திட்டப்பணி நிறைவடையும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










