கைப்பேசி வாங்க பெற்றோா் பணம் தராத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் சுகுந்தன் (21). இவா் தனது தந்தையாருடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருவது வழக்கமாம். கைப்பேசி வாங்குவததற்கு ரூ. 20 ஆயிரம் தனது தந்தையாரிடம் கேட்டுவந்தாராம். பணம் தருவதாக தந்தை உறுதியளித்துள்ளாா்.
எனினும், பெற்றோா் பணம் தராத கோபத்தில் சுகுந்தன் இருந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு அறைக்கு தூங்கச் சென்றவா், ஞாயிற்றுக்கிழமை வெகு நேரமாகியும் வெளியே வராத நிலையில், கதவை உடைத்துச் சென்று பாா்த்தபோது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







