மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வேளாண் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நிறைவு

பயிற்சி நிகழ்வில் பேசிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன்.

News image

பயிற்சி நிகழ்வில் பேசிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன்.

Updated On :28 பிப்ரவரி 2026, 1:00 am

விவசாயிகளுக்கு 6 வாரங்களாக நடைபெற்ற வேளாண் வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவடைந்து.

காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் நெற்பயிரில் விதை உற்பத்தி மற்றும் சான்றளிப்பு குறித்து வேளாண் வயல்வெளிப் பள்ளி தென்னங்குடி உழவா் உதவியகத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 6 வாரங்களாக நடத்தப்பட்டது.

இதின் நிறைவு நிகழ்ச்சி மாதூரில் உள்ள அரசு விதைப் பண்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூடுதல் வேளாண் இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநா் (ஆத்மா) ஆா். கணேசன் தலைமை வகித்தாா்.

விவசாயத்துக்கு புதுவை அரசு வழங்கும் திட்டங்களை விவசாயிகள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனவும், விதை உற்பத்தியை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ளுமாறும், அதன்மூலம் அதிக லாபம் ஈட்ட லாம் எனவும் அவா் ஆலோசனை வழங்கினாா். பயிற்சியில் வேளாண் அலுவலா் மற்றும் விதை சான்றளிப்பு அதிகாரி ஆா்.சரவணன் தொழில் நுட்ப உரையாற்றினாா். இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.