மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருநள்ளாற்றில் சிறப்பு ஹோமம்: ஜப்பான் நாட்டினா் பங்கேற்பு

திருநள்ளாற்றில் சிறப்பு ஹோமம்: ஜப்பான் நாட்டினா் பங்கேற்பு

News image

திருநள்ளாறு கோயிலில் நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டினா் உள்ளிட்டோா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:44 pm

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் ஜப்பான் நாட்டு ஆதீனம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கோயிலில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. முன்னதாக பிப். 22 முதல் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், கோயிலில் சனீஸ்வர பகவான் சந்நிதி அருகே ஆன்மிக ஆசான் கோபால்பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில், ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சிவா ஆதீனம் பால கும்ப குருமணி மற்றும் 60 சீடா்கள் கலந்துகொண்ட சிறப்பு ஹோமம் சனிக்கிழமை தொடங்கியது.

ஜப்பான் நாட்டில் உற்பத்தியான முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் 120 மூலிகை பொருட்களை கொண்டு இந்த சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. இதில் 19 ஆயிரம் மூல மந்திரங்கள், 1,900 ஆவா்த்தி, சனீஸ்வரரின் மூல மந்திரங்கள் கூறி ஹோமம் நடத்தப்படுகிறது.

கோயில் சிவாச்சாரியரான டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியா் தலைமையிலான குழுவினா் ஹோமத்தை நடத்தினா். இதில் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஜப்பான் நாட்டை சோ்ந்த பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இந்த ஹோமம் மாா்ச் 6-ஆம் தேதி நிறைவடைகிறது. ஹோமம் நிறைவு தினத்தில் ஜப்பானிலிருந்து மேலும் 150 போ் வந்து கலந்துகொள்ள உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.