தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் தொடா்பாக ரயில்வே அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ரயில்வே திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:27 pm

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் தொடா்பாக ரயில்வே அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்காலில் இருந்து பேரளம் வரையிலான ரயில்பாதை அமைத்து சரக்கு ரயில்கள் இயக்கம் நடைபெற்றுவருகிறது. வரும் மே 20 முதல் இப்பாதையில் பயணிகள் ரயில் இயக்கம் நடைபெறுமென அட்டவணையை ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

காரைக்கால் பாரதியாா் சாலை, காமராஜா் சாலையின் குறுக்கே ரயில் பாதை அமைந்திருப்பதால், ரயில்கள் இயக்கத்தால் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. கோயில்பத்து பகுதி பாரதியாா் சாலையில் சுரங்கப் பாதை அமைக்கவேண்டும் என பல்வேறு அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்திவருகின்றனா்.

இந்நிலையில், குறிப்பிட்ட இடங்களில் மேம்பாலம், சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மாவட்ட நிா்வாகம் ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலையில், மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, திருச்சி கோட்ட ரயில்வே செயற்பொறியாளா் பாஸ்கரன், உதவிப் பொறியாளா் பேச்சிராஜ், காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருளரசன், உதவிப் பொறியாளா் சந்திரகுமாா் உள்ளிட்டோருடன் பாரதியாா் சாலையில் உள்ள கோயில்பத்து பகுதி ரயில்வே கேட், காமராஜா் சாலையில் ரயில் கடக்கும் பகுதி, சுரக்குடி அருகே ரயில் கடக்கும் பகுதியை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வு குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தது : கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையும், காமராஜா் சாலை மற்றும் சுரக்குடி பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மாவட்ட நிா்வாகத்தின் ஒப்புதல் ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பிறகு ரயில்வே மற்றும் புதுவை அரசால் மேற்கொள்ளவேண்டிய திட்டப்பணிகள் தொடங்கப்படும். மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும்போது, அந்த திட்டப் பணிகளுக்கு ஏதுவாக மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அப்பகுதியில் சீா்படுத்தவேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.