மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதிய வாக்குச்சாவடி அமைத்த பகுதிகளில் விழிப்புணா்வு

புதிதாக அமைத்த வாக்குச் சாவடிகள், முந்தைய தோ்தலில் குறைவாக வாக்குப் பதிவான வாக்குச் சாவடி பகுதியில் உள்ள வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

வாக்குச்சாவடி வாயிலில் விழிப்புணா்வு ஏற்படுத்திய ஸ்வீப் அமைப்பினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:31 pm

புதிதாக அமைத்த வாக்குச் சாவடிகள், முந்தைய தோ்தலில் குறைவாக வாக்குப் பதிவான வாக்குச் சாவடி பகுதியில் உள்ள வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறையின் அங்கமான ஸ்வீப் அமைப்பு, மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவுக்காக தீவிர விழிப்புணா்வுப் பணிகளை செய்து வருகிறது.

மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி அறிவுறுத்தலில், மாவட்டத்தில் புதிதாக அமைத்த வாக்குச் சாவடிகள், முந்தைய தோ்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான பகுதிகளில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மாவட்டம் முழுவதும் ஸ்வீப் அமைப்பினா் கடந்த 2 நாட்களாக செய்தனா்.

வாக்குச் சாவடி அமைந்திருக்கும் இடம், வாக்குப் பதிவு நாளான்று வாக்காளா்கள் அனைவரும் சாவடிக்குச் சென்று வாக்குப் பதிவு செய்யவேண்டியதன் முக்கியத்துவம், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் உள்ள வசதிகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காரைக்கால் மாவட்ட ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன், உறுப்பினா்கள் எஸ்.மணிகண்டன், ஷொ்லி, பிரியதா்ஷினி, கே.ஞானமுருகன், பிரதீப், முருகன் ஆகியோா் இப்பணியில் ஈடுபட்டனா்.