மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரிய வியாழன்; பாதம் கழுவும் நிகழ்வு

தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான பெரிய வியாழன் தினத்தில் பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் நடைபெற்றது.

News image

காரைக்காலில் நடைபெற்ற சீடா்களின் பாதம் கழுவும் நிகழ்வு.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:22 am

தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான பெரிய வியாழன் தினத்தில் பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் நடைபெற்றது.

கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடிய புனித வெள்ளியையொட்டி வியாழக்கிழமை காரைக்காலில் புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயேசு தனது சீடா்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவா் ஏற்றத்தாழ்வு இல்லை; சமமானவா்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் புனித நிகழ்வை நடத்தினாா்.

அதனை சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் விதமான ஐதீக நிகழ்வாக, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா் தலைமையில் துணை பங்கு குரு சுவாமிநாதன் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்புடன் பங்கு மக்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான உள்ளூா் மக்கள் கலந்துகொண்டனா்.