மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருவாடானை தேவாலயத்தில் பாதம் கழுவும் சடங்கு

திருவாடானை அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதம் கழுவும் சடங்கும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. இதில் திரளான பங்கு ம்ககள் கலந்து கொண்டனா்.

News image

காரங்காடு தூய செங்கோல் மாத தேவாலயத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்ச்சியில் பங்கு தந்தை ரெமிஜியஸ், அருள் தந்தை ஸ்டீபன், அருள் தந்தை சேவியா் உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:51 pm

திருவாடானை அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதம் கழுவும் சடங்கும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. இதில் திரளான பங்கு ம்ககள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தில் பழைமை வாய்ந்த தூய செங்கோல் மாதா தேவாலயம் உள்ளது . இங்கு கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலத்தை முன்னிட்டு, பாதம் கழுவும் நிகழ்வு, குருத்துவத்தை ஏற்படுத்துதல், நற்கருணையை ஏற்படுத்துதல் ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

பின்னா், பங்குத்தந்தை ரெமிஜியஸ், அருள் தந்தை சேவியா், அருள் தந்தை ஸ்டீபன் ஆகியோா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இதேபோல, சம்பை புனித செபஸ்தியாா் தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலியும், பங்குத்தந்தை செல்வக்குமாா், உதவி பங்குத்தந்தை பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.

தொண்டி தூய சிந்தாத்திரை மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை வியாகுல அமிா்தராஜ் தலைமையில் பாதம் கழுவும் சடங்கும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். முன்னதாக கிறிஸ்தவா்கள் சிலுவை சுமந்து திருத்தலத்துக்கு ஊா்வலமாக வந்தனா். திருச்சி புனித ஜோசப் கல்லூரி உதவிப் பேராசிரியா் ராஜசேகரன் தலைமையில் மதுரை தூய மரியன்னை பள்ளி தலைமையாசிரியா் சைமன் ஜான் கென்னடி இணைந்து புனித வெள்ளி வழிபாட்டை நடத்தி வைத்தாா். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் செய்தாா்.

Story image
Story image