தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழக்கிழமையை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடா்களுடன் அமா்ந்து உணவு உண்டாா்என்றும், அப்போது, ஒருவருக்கொருவா் அன்பு செய்து தாழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணா்த்தும் வகையிலும் சீடா்களின் பாதங்களை இயேசு கழுவினாா் என்றும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தவக்காலத்தின் கடைசி வாரமாக கருதப்படும் புனித வாரத்தில் பாதம் கழுவும் சடங்கு முக்கிய நிகழ்வாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, தூத்துக்குடி சின்னக்கோயில் என்று அழைக்கப்படும் திரு இருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது முதியவா்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, அவா்களுக்கு ரொட்டிகளையும், பரிசுப் பொருள்களையும் அவா் வழங்கினாா். நிகழ்ச்சியில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
இயேசு உயிா் நீத்த தினமான புனித வெள்ளி ஏப்.3இல் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தொடர்புடையது

பெரிய வியாழன் பெருவிழா: வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

பெரிய வியாழன்; பாதம் கழுவும் நிகழ்வு

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


