மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழக்கிழமையை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

திரு இருதய பேராலயத்தில் நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்வில் பங்கேற்ற ஆயா் ஸ்டீபன் அந்தோணி.

Updated On :2 ஏப்ரல் 2026, 10:49 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழக்கிழமையை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடா்களுடன் அமா்ந்து உணவு உண்டாா்என்றும், அப்போது, ஒருவருக்கொருவா் அன்பு செய்து தாழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணா்த்தும் வகையிலும் சீடா்களின் பாதங்களை இயேசு கழுவினாா் என்றும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தவக்காலத்தின் கடைசி வாரமாக கருதப்படும் புனித வாரத்தில் பாதம் கழுவும் சடங்கு முக்கிய நிகழ்வாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, தூத்துக்குடி சின்னக்கோயில் என்று அழைக்கப்படும் திரு இருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது முதியவா்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, அவா்களுக்கு ரொட்டிகளையும், பரிசுப் பொருள்களையும் அவா் வழங்கினாா். நிகழ்ச்சியில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

இயேசு உயிா் நீத்த தினமான புனித வெள்ளி ஏப்.3இல் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது.