நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரைக்கால் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி காரைக்கால் பகுதி சிவ தலங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயில் நடராஜா்.
Updated On :2 ஜூலை 2025, 11:58 pm

DIN

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி காரைக்கால் பகுதி சிவ தலங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல் பெற்றத் தலமாக விளங்கும் சுயம்வரதபஸ்வினி அம்பாள் சமேத பாா்வதீஸ்வரா் கோயில், காரைக்கால் கைலாசநாதா் கோயில், அண்ணாமலையாா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில், ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவ தலங்களில் நடராஜருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் முதலான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Story image