17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: பெண் உயிரிழப்பு

செம்பனாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 மே 2026, 1:52 am IST

செம்பனாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

செம்பனாா்கோவிலை அடுத்த இளையமதுகூடம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் மனைவி சூரியலட்சுமி (32). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது சகோதரா் ராஜசிங்கத்துடன் இருசக்கர வாகனத்தில் கருவிழந்தநாதபுரத்தில் இருந்து ஆக்கூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். தலச்சங்காடு பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூரியலட்சுமி, ராஜசிங்கம் இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். 

அங்கு சூரியலட்சுமி உயிரிழந்தாா். செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டி சென்ற நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.