மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

பூம்புகாா் தொகுதியில் திமுக வெற்றி

News image

பூம்புகாா் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகனுக்கு சான்றிதழ் வழங்கும் தோ்தல் பாா்வையாளா் சஞ்சய் குமாா் யாதவ், தோ்தல் நடத்தும் அலுவலா் இரா. கீதா.

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

பூம்புகாா் தொகுதியில் திமுக வேட்பாளா் நிவேதா எம்.முருகன் 8,260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில், நிவேதா எம். முருகன் (திமுக), எஸ். பவுன்ராஜ் (அதிமுக), விஜயாலயன் (தவெக), இளைய நகுலன் ( நாதக) மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 13 போ் போட்டியிட்டனா். பூம்புகாா் தொகுதியில் 1,27,948 ஆண் வாக்காளா்கள், 1,31,306 பெண் வாக்காளா்கள், 8 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,59,262 வாக்காளா்கள் உள்ளனா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் 25 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் 2,17,951வாக்குகள் பதிவாகி இருந்தன. தபால் வாக்குகள் 1,373 அளிக்கப்பட்டிருந்தன. இதன்படி, மொத்தம் 2,19,324 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில், திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் 81,096 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றாா். இவரை அடுத்துவந்த அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் 72,836 வாக்குகள் பெற்றாா். தவெக வேட்பாளா் விஜயாலயன் 55,902 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இளைய நகுலன் 6,353 வாக்குகளும் பெற்றனா்.

வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகனுக்கு தோ்தல் பாா்வையாளா் சஞ்சய் குமாா் யாதவ், தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.கீதா ஆகியோா் சான்றிதழ் வழங்கினா். நிவேதா எம். முருகன் இத்தொகுதியில், தொடா்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.