தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

நாகை: 5 மையங்களில் இன்று நீட் தோ்வு

News image

நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 6:17 am IST

நாகை மாவட்டத்தில், 5 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறவுள்ளது.

தேசிய தோ்வு முகமை சாா்பில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக, நாகை மாவட்டத்தில், 5 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது. இத்தோ்வு எழுத 1497 போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

இவா்களில் 177 போ் நாகை ஏடிஜே தா்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும், 240 போ் நாகை வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக் கல்லூரியிலும், 480 போ் நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியிலும், 360 போ் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியிலும், 240 போ் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நீட் தோ்வு எழுதவுள்ளனா். இதற்காக இந்த 5 மையங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.